
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பான தமிழக அரசின் சிறப்புக்குழு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தத்து ஆலோசித்தது.
தமிழக மாணவர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வர தமிழக அரசும் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக அவசர கட்டுப்பாட்டு மையங்கள் திறக்கப்பட்டு அங்குள்ள மாணவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் மாணவர்கள் மீட்பு நடவடிக்கைகளுக்காக திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, அப்துல்லா, எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா மற்றும் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக்குழுவை தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் இந்த சிறப்பு குழுவினர் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். உக்ரைனில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் உள்ள நிலையில் இதுவரை 777 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.