
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. விலை உயர்வுக்குப் பிறகு, பயனர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனினும், பிஎஸ்என்எல் அதன் திட்டங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
பிஎஸ்என்எல் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அற்புதமான டேட்டா பலன்களையும் வழங்குகிறது. மேலும், சில சந்தர்ப்பங்களில் ஓடிடி இயங்குதளத்துடனும் இவை வருகின்றன. குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் மூன்று திட்டங்களை பிஎஸ்என்எல் கொண்டுள்ளது.
பிஎஸ்என்எல்-இன் முதல் திட்டம் ரூ.429க்கு வருகிறது. இது ஓடிடி இயங்குதளத்துடன் வருகிறது. இந்த திட்டம் 81 நாட்களுக்கு செல்லுபடியாகும். திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு வசதியும் உள்ளது.
இது தவிர, இந்த திட்டத்தில் பயனர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவை பெறுகிறார்கள். டேட்டா தீர்ந்த பிறகு வேகம் 40 கேபிபிஎஸ் ஆகிறது. இத்திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ் உடன் ஈரோஸ் நவ் சந்தாவும் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல்-இன் ரூ.447 திட்டத்தில் மொத்தம் 100ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டம் 60 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. பயனர்கள் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சர்வீசஸ் ஆகியவற்றிலும் குழுசேரலாம்.
பிஎஸ்என்எல்-இன் ரூ.599 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 5 ஜிபி டேட்டா கிடைக்கும். இதனுடன், வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் ஸிங் ஸ்ட்ரீமிங் தளத்தின் மெம்பர்ஷிப்பையும் வழங்குகிறது. இதில் ஆயிரக்கணக்கான பாடல்கள், திரைப்படங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு உள்ளடக்கங்கள் உள்ளது. நள்ளிரவு 00:00 முதல் காலை 05:00 வரை வரம்பற்ற இலவச இரவு டேட்டாவைப் பெறலாம்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா திட்டங்கள் அதிக விலை கொண்டவை என்றாலும், அவை 4ஜி சேவையுடன் வருகின்றன. இந்த ஆண்டு பிஎஸ்என்எல் அதன் 4ஜி சேவையை கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.