தமிழ்நாட்டில் இந்தியை நுழைய விடமாட்டோம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம் !!

தமிழ்நாட்டில் இந்தியை எந்த விதத்திலும் நுழைய விடமாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் இந்தியை நுழைய விடமாட்டோம் :  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம் !!

5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே இடம் எனவும் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி இல்லை எனவும் கூறினார்.

உலகத்தின் முன்னோடி மொழியாக தமிழ் இருக்க தமிழகத்தில் இந்தி மொழியை எந்தவிதத்திலும் நுழைய விடமாட்டோம் எனவும் ஏ.ஆர் ரகுமானின் தமிழே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், தி.மு.க ஆட்சியில் பேசப்படும் திராவிட மாடல் மக்களை ஏமாற்றும் செயல் எனவும், உள்ளாட்சி பிரதிநிதிகளின் அட்டகாசத்தால் தமிழ்நாட்சின் சட்டம் ஒழுங்கு சீரழிந்திருப்பதாக தெரிவித்த அவர், அ.தி.மு.க ஆட்சியில் வெளிப்படை தன்மையுடன் இருந்த டெண்டர், தி.மு.க ஆட்சியில் தி.மு.க-வினருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், கரூரில் போடாத சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்படிருப்பதாகவும், குறிப்பிட்ட நபர்களுக்கே அனைத்து டெண்டர்களும் வழங்கப்படுவதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், அ.தி.மு.க-வை பொறுத்தவரை சிறப்பான வாதங்களை எடுத்து வைத்திருப்பதாகவும், தீர்ப்பு சாதகமாக இருக்கும் என நம்புவதாகவும் சசிகலா வழக்கு தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com