
பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் தாம்பரம் காந்தி சாலையில் இருந்து மக்களாட்சியை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் பேரணியாக சென்று தாம்பரம் சண்முகம் சாலையில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதற்கு காவல் துறை சார்பில் பேரணிக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தடையை தாண்டி அமைப்பினர் பேரணியாக செல்லவுள்ளதாக தகவல் வெளியானதால் உயர் காவல் அதிகாரிகள் தலைமையில் தாம்பரம் காந்தி சலையிலேயே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரை கைது செய்ய 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.