
கொரோனா கால இடைவெளிக்கு பிறகு, மீண்டும் டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மது விலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இன்று முதல் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது. விலை குவாட்டருக்கு 10 ரூபாய், ஆப்புக்கு 20 ரூபாய், புல்லுக்கு 40 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது.
பீர் விலையில் மாற்றம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மதுபான விலை உயர்வால் அரசுக்கு ஒரு நாளைக்கு மது விற்பனை மூலம் கூடுதலாக 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கிடைக்கும் எனவும் ஆண்டுக்கு 4 ஆயிரத்து 396 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே புதிய விலைப்பட்டியலை மேற்பார்வையாளர்கள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கபட்டுள்ளது.