வண்டலூர் பூங்காவிற்கு தமிழக அரசு ரூ.6 கோடி ஒதுக்கீடு

வண்டலூர் பூங்காவிற்கு தமிழக அரசு ரூ.6 கோடி ஒதுக்கீடு

வன உயிரினங்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.
Published on

இதுகுறித்து வெளியான அறிவிப்பில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ரூ.6 கோடியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

வனவிலங்குகளின் உணவு, பராமரிப்பு மற்றும் இதர செலவுகள் என மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடியே 28 லட்சம் ஆகிறது.

மேலும்,கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பல மாதங்கள் தொடர்ந்து பூங்கா மூடப்பட்டிருப்பதால் அதிகளவில் வருவாய் இழப்பு மற்றும் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நிதி ஒதுக்குமாறு முதன்மை வனப்பாதுகாவலர் கோரிய நிலையில் உடனுக்குடன் வனவிலங்குகளின் உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக ரூ.6 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசின் வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

logo
vnews27
www.vnews27.com