பெண்கள் உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து !

பெண்கள் உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து !

12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடை பெற்று வருகிறது. இதல் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இதில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா ‘டாஸ்’ வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 293 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனை டேனி வியாட் சதம் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ‌ஷப்னம் இஸ்மாயில் 3 விக்கெட்டும், மாரிஹன் காப், மசாபாத கிளாஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 294 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணி விளையாடியது. இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் தினறிய தென் ஆப்பிரிக்க அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இறுதில் அந்த அணி 38 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மிக்னான் டு ப்ரீஸ் 30 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியில் அபாரமாக பந்துவீசிய சோஃபி எக்லெஸ்டோன் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரண்டாம் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெண்கள் உலகக்கோப்பை போட்டியின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் ஏப்ரல் 3-ம் தேதி மோத உள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com