அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில், பொதுப்பள்ளிக்கான பள்ளிகளுக்கான மாநில மேடை என்ற அமைப்பின் சார்பில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் கல்வியும் ஜனநாயகமும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் விழாவில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி, அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி இன்று முதலமைச்சர் அறிவிப்பின் படி சமுத்துவநாளாக கொண்டாடி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களாகிய நாங்களும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டோம்.

சமூகநீதி, சமத்துவத்தை அனைத்து இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் முக்கியமாக மாணவர்களின் உள்ளத்தில் உருவாக்க வேண்டும் என கூறினார்.

படிக்கும் போதே மாணவர்கள் சமுதாய உணர்வை பெற வேண்டும் என்பதுதான் உண்மையான கல்வி என்பதை அம்பேத்கர் பிறந்தநாளில் உருவாக்க என்பதை கொண்டு செயல்பட வேண்டும்.

முதலமைச்சர் ஆணையை ஏற்று இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் என பாராட்டு தெரிவித்தார்.

சுதந்திரத்தை விட சமுத்துவம் முக்கியம் என்பதால்தான் அரசியமைப்பு சட்டத்திலே கொண்டு வந்துள்ளனர். கல்வி பொதுப்பட்டியலுக்கு சென்ற பிறகு மாநில அரசுகளின் கலந்தாலோசிக்காமல் தேசிய கல்வி கொள்கையை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளது. ஒறுமைப்பாட்டு உணர்ச்சிகளை உருவாக்குவது வேறு. ஆனால் உணவு, உடை, மொழி, படிப்பு என ஒரே மாதிரியா இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

வேறுபாடுகள் உணர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை அரசியலைப்பு சட்டத்தில் அம்பேத்கர் பல்வேறு வடிவங்களில் குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்தார். சமுத்துவ உணர்வை உருவாக்க வேண்டும் என்பதற்காக பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்தார்.

காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக திமுக அரசு அறிவித்தது. தலைவர்களின் சொன்ன கொள்கைகளை இளைஞர்களிடையே உருவாக்க வேண்டும் என்பதை தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.

மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிற்ப்பாக செயல்பட வேண்டும் என்பதற்கான நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என பேசினார்.இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை விட சமுதாய ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ளது.

முதலில் சமுதயா ஏற்றத்தாழுவுகளை போக்க வேண்டும் அதனைதான் அம்பேத்கரும், பெரியாரும் கூறினார்கள். அதனை போக்கும் விதத்தில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். அம்பேத்கர் பிறந்த மாநிலத்தில் கூட பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயர் வைக்க முடியவில்லை, ஆனால் முத்தமிழறிஞர் கலைஞர் சென்னை சட்டப்பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை வைத்துள்ளார்.

புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பது போல் முதலமைச்சர் அம்பேத்கர் பிறந்தநாளை சமுத்துவ நாளாக அறிவித்துள்ளார்.அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் இல்லை என்றும் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என கூறிய அவர், மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு திட்டத்தை தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

கவர்னரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களை கையெத்திடக்கோரி அமைச்சர் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோர் சென்று இருப்பதாக அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வட மாநிலத்தவர்கள் தமிழ்நாடு பள்ளிகளில் படித்தது போன்ற போலிச்சன்றிதழ் தயாரித்து பணியில் சேர்ந்தது குறித்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

கல்வி பொதுப்பட்டியலிலும் இல்லாமல் மாநில பட்டியலிலும் இல்லாமல் தற்போது ரகசிய பட்டியலில் உள்ளது என பேசிய அவர், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ( TET) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான அவசியம் இல்லை என்றும் தற்போது வரை 1.5 லட்சம் பேர் கடந்த 5 நாட்களில் விண்ணப்பித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com