
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அஜீஸ் முல்க் தெரு, ஜி.எம்.எம். தெரு, ஜி.ஏ.ஏ.கான் 9வது தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரத்தில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இரவு அண்ணாசாலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது
கடந்த சிலநாட்களாக இரவுநேரத்தில் தொடர்மின்வெட்டு ஏற்படுவதாகவும் இதனால் பொதுத்தேர்வு எழுதும்மாணவர்கள் கடும்சிரமத்துக்கு ஆளாகிவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர் மின்வெட்டு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக காவல்துறையினர் அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 30 நிமிடம் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.