
10, 11,12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வை மே 2 தேதிக்குள் நடத்தி முடித்து செய்முறை தேர்வுகள் மதிப்பெண்களை மே 4-க்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்கம் உத்தரவிட்டிருந்தது.
அதே போல் 11,12 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு நேரம் 3 மணியிலிருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை பொருத்து பேட்ச் வாரியாக தேர்வில் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் செய்முறை தேர்வு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.