
சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
தொண்டு நிறுவனம் மூலமாக ஆர்வமுள்ள பொதுமக்கள், தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே வளர்ப்பு பிராணிகளுக்கு கோடை காலத்தில் தண்ணீர் வைக்க ஏதுவாக தண்ணீர் தொட்டிகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் தாண்டி வெப்பம் இருக்கிறது.
சேவ் சக்தி பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனம் "keep a bowl" என்ற ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளனர். கோடைகாலத்தில் நாம் தண்ணீருக்கு ஏங்குவது போல கால்நடைகளும் பறவைகளும் ஏங்கும். இந்த சூழ்நிலையில் குடிதண்ணீரை வைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
வெப்ப அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலக கால்நடைகள் தினத்தன்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் இத்திட்டத்தை தொடங்கியுள்ள அமைப்பிற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.