
இந்தியாவில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமிர்தப்பெருவிழாவைக் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் 30 அடி அகலமும் 12 அடி நீளமும் உள்ள பிரமாண்ட ஓவியம் வரையப்பட்டது. இந்தியா, தமிழக கலாச்சார செழுமையை சித்தரிக்கும்விதமாகவும் கடந்த கால பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாகவும் கே.கே. நகரில் உள்ள தனியார் கலைக் கல்லூரி மாணவர்கள் 15 நாட்களில் இந்த ஓவியம் வரைந்தனர்.
விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் விமானத்திற்கு செல்லும் பயணிகள் பார்த்து ரசிக்கும் வகையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஒவியம் திறப்பு விழா நடந்தது. சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் தலைமை தாங்கினார்.
விமான நிலையங்கள் ஆணைய கண்காணிப்பு பொது மேலாளர் அனுராக் சர்மா ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இந்திய விமான நிலையங்கள் ஆணையக தலைமைக் கண்காணிப்பு அலுவலர் அமல் கார்க் ஓவியத்தை திறந்து வைத்தார்.