
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிவரும் தீவிர புயல் அசானி கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து தற்போது மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஒடிசா மற்றும் ஆந்திர கடல் பகுதிகளை நெருங்க கூடும் எனவும்
நாளை முதல் 3 நாட்களுக்கு கடலோர ஒடிசா பகுதிகளில் மிக கனமழைக்கும், வட கடலோர ஆந்திர பகுதிகளில் நாளை மாலையும் மிக கனமழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.