
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியிலிருந்து 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.
கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் செய்யப்படுவதால் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் உலசின் சிறந்த மைதானமாக தயாராகிறது சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானம். மேலும் விரிவாக்கம் மற்றும் விரிவான திட்ட அறிக்கையுடன் புதுப்பித்தலுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் மாணவர்களின் திறனை மேம்படுத்த ரூ.20 லட்சம், அடையாறு ஆறு தூய்மைப்படுத்த ரூ.25 லட்சம், பக்கிங்காம் கால்வாயை தூர்வாற, தூய்மைப்படுத்த ரூ.25 லட்சமும் சேப்பாக்கம் மைதானம் சார்பில் வழங்கப்பட உள்ளது.
நிபந்தனை 1 - மைதானத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை எடுத்துச்செல்லும் முறை மற்றும் அதற்கான திட்டத்தை முறைப்படி தயார் செய்ய வேண்டும்
நிபந்தனை 2 - நீர்நிலை மற்றும் நீரோட்டம், சார்ந்த இடங்களில் விரிவாக்கப்பணிகள் நடைபெறாது என உறுதியளிக்க வேண்டும்
நிபந்தனை 3 - மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்படவில்லை. ஒருவேளை மரங்களை வேரோடு பிடுங்கினால் அதனை மாற்று இடத்தில் நட வேண்டும்
நிபந்தனை 4 - புதிய கட்டுமானத்தால் அருகில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
நிபந்தனை 5 - பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்
நிபந்தனை 6- பார்வையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் போதுமான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்
நிபந்தனை 7 - குடிநீர், கழிவுநீர், கால்வாய்கள் மற்றும் மழைநீர்வடிகால் ஆகியவற்றிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறு திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்
நிபந்தனை 8 - பார்வையாளர்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்
நிபந்தனை 9 - போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றிற்கு இடமளிக்காத வகையில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.