தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

வெப்ப சலனம் காரணமாகவும், தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று, ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வங்கக் கடல் பகுதிகளில் இந்த 3 நாட்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே 28 மற்றும் 29 ஆம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
vnews27
www.vnews27.com