
வங்க கடலில் அசானி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த புயல் ஒடிசா, ஆந்திரா அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் இருந்து இன்று காலை 7 மணிக்கும், காலை 10:40 மணிக்கும் விசாகப்பட்டினம் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அதைப்போல் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய இன்று காலை 10:40 மணிக்கும், நன்பகல் 1.45 மணிக்கும் சென்னை வரவேண்டிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து ஐதராபாத், ஜெய்பூா், மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் 3 விமானங்களும் ஐதராபாத், ஜெய்பூா், மும்பை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டிணம், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 10 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இந்த விமானங்கள் ரத்து பற்றிய தகவல்கள் பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் நேற்று மாலையே தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.