
சென்னையில் தங்கம் விலை இன்றைய தினம் கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 5,055 க்கும், சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து 40,440 க்கும் விற்பனை செய்யப்படுகிிறது.
கொரோனோ முதல் அலையில் தங்கம் விலை 40 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்வு சந்திப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து தங்கம் வைரம் வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் யோகேஷ் அளித்த பேட்டியில் உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெறும் போர் எதிரொலி காரணமாகவே தங்கம் விலை உயருகிறது.
ஒரு நாட்டில் போர் நடக்கும் போது அந்த நாட்டின் பண மதிப்பு வீழ்ச்சி அடையும் என்பதால் போர் நடைபெறும் நாட்டில் தங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து அந்த நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கும் என்பதால் உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு உயரும் என தெரிவிக்கபட்டுள்ளது.
கொரோனா முதல் அலையின் போது தங்கம் விலை 43 ஆயிரத்தை தாண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.