
மாநாட்டை தொடங்குவதற்கு முன்பாக நாமக்கல் கவிஞர் மாளிகை முன்பாக கூடியதாக பகுதியில் மகிழம் மரக்கன்றை நட்டுவைத்த பின்பு மாநாட்டுக்கு செல்கிறார்.இதுவரை மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பங்கு பெறும் மாநாடு மட்டுமே நடைபெற்று வந்த்து.
இந்த நிலையில் முதல் முறையாக வனத் துறை அலுவலர்களும் மாநாட்டில் பங்கேற்க என்ற அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டார்.இதன் அடையாளமாகவே வனத் துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்வதற்கு முன்பு மரக்கன்று வைத்துவிட்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
கடந்த 10 ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் காவல்துறை மற்றும் வனத் துறை அலுவலர்களுடன் முதல் நாள் மாநாடு தொடங்கியது.
இரண்டாம் நாள் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இறுதி நாளான இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர் ஆலோசனை மேற்கொண்டு மாநாடு இன்று நிறைவு பெறுகிறது.