இந்தியாவுக்கு தமிழ்தான் இணைப்புமொழி - ஏ.ஆர். ரகுமான் !!

இந்தியாவுக்கு தமிழ்தான் இணைப்புமொழி - ஏ.ஆர். ரகுமான் !!

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அமித் ஷாவின் பேச்சு இந்தி பேசாத மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், தனது சமூக ஊடக பக்கங்களில், தமிழ்தாய் தமிழின் அடையாளமான ழ கரத்துடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை, இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர் என்ற பாரதிதாசனின் பாடலை குறிப்பிட்டு தமிழணங்கு என பதிவிட்டுள்ளார்.

இது இந்திய அளவில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் ஏ.ஆர். ரகுமான் கலந்துகொண்டார். பின்னர், அவரிடம் இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை ஏற்றுகொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளாரே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, ஏ.ஆர். ரகுமான்’ தமிழ்தான் இணைப்பு மொழி’ என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com