
நாட்டில் கொரோனாவின் 4ம் அலை வருகிற ஜூன் மாதம் 22-ம் தேதி தொடங்கி அக்டோபர் 24-ம் தேதி வரை நீடிக்கும் என கான்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர். ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கொரோனா உச்சம் அடையும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றின் 4-ம் அலை வராது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நச்சு உயிரியல் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை முடிவுக்கு வந்து விட்டது. எனினும் 4 வாரங்கள் தொற்றின் தாக்கம் இருக்கும் எனவும் தெரிவித்தார். கொரோனா வைரசில் மாறுபாடு வராத வரையில், கொரோனாவின் 4வது அலை ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.