இந்தியா முழுவதும் 12,054 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை

இந்தியா முழுவதும் 12,054 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளிவிவரங்கள் படி, நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 795 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். மொத்தமாக இதுவரை 4,24,96,369 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இன்று மட்டும் 58 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். மொத்தமாக இதுவரை 5,21,416 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். நாடு முழுவதும் தற்போது 12,054 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.76 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.21 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 16,17,668 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மொத்தமாக இதுவரை 1,84,87,33,081 டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரானா கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கி உள்ளதால் மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com