
இந்தியாவில் பான் கார்டு வைத்திருப்பது அவசியமான ஒன்று. ஆனால், தற்போது பான் கார்டு மோசடிகள் ஏராளமாக நடக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில், இந்தியா உட்பட உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், டிஜிட்டல் ஆவணங்கள் தொடர்பான மோசடியும் நாட்டில் அதிகரித்து வருகிறது.
பான் கார்டு என்பது நமது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஆவணமாகும். அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, பான் கார்டு உண்மையானதா அல்லது போலியானதா என தெரிந்துக் கொள்வது அவசியமாகிறது.
இதற்காக, QR குறியீடு தேவை. எனவே, QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வருமான வரித் துறையின் செயலியைப் பதிவிறக்கவும். அதன் பிறகு, உங்கள் மொபைல் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம், பான் கார்டு உண்மையானதா இல்லையா என்பதை எளிதாகக் கண்டறியலாம்.
வருமான வரித்துறை இணையதளத்திற்குச் சென்று உங்கள் பான் கார்டைச் சரிபார்க்கலாம். எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளவும்.
முதலில், www.incometax.gov.in/iec/foportal என்ற அதிகாரப்பூர்வ வருமான வரித் துறை இணையதளத்தில் கிளிக் செய்யவும்
இப்போது உங்கள் PAN ஐ சரிபார்க்கவும் (Verify Your PAN) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
அதைக் கிளிக் செய்தால், ஒரு புதிய பக்கம் திறக்கும்.
இப்போது, உங்கள் மொபைல் எண், பிறந்த தேதி மற்றும் பான் கார்டு தகவல்கள் கேட்கப்படும்.
இப்போது, வருமான வரித் தரவு உங்கள் தரவுகளுடன் பொருந்துகிறதா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.